Friday, November 30, 2018

மாற்றான் படம் போல சீனாவில் நடந்த அதிசயம்




பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உலகின் முதல் ஜீன் மாற்றப்பட்ட குழந்தையை உருவாக்கி உள்ளார். நம் மாற்றான் படம் மார்வல் படமான எக்ஸ்மேன், ஐயன்மேன் படத்தில் வருவது போல மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்க படுவார்கள், இந்த மரபணு மாற்றத்தின் மூலம் ஒரு தனி மனிதனின் அறிவு, செயல்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கும்.



இதே போல சீனாவை சேர்ந்த '' ஹீ ஜியாங்கு'' என்ற மருத்துவர் சீனாவில் ஷென்ஸென் பகுதியில் உள்ள தன்னுடைய சோதனை மையத்தில் இந்த குழந்தையை உருவாக்கி உள்ளார். இதுவரை 9 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஜீன் மாற்றத்தை செய்துள்ளார். அவர் கூறியதாவது - ஜீன்களில் மாற்றம் செய்வதன் மூலம் ஒரு குழந்தை இயல்பாக இருக்கும் திறமையை பல மடங்கு அதிகரிக்க முடியும், இதில் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. மேலும் குழந்தைக்கு எய்ட்ஸ் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சியின் முடிவாக நான்கு நாட்கள் முன்பு ஒரு குழந்தை பிறந்ததுள்ளது. ஆனால் இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது இயற்கைக்கு புறம்பான செயல் ஆகையால் இவரை விசாரித்து கைது செய்யும்படி சீன அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Thursday, November 29, 2018

2.O படம் புதிய சாதனை படைத்துள்ளது


















 சென்னை: டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்க்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.O, இந்தியாவின் மிக பிரமாண்ட படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இதன் சாட்டிலைட் உரிமம் மட்டும் 350 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நம் தமிழ் படம் அமைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகிறது, இதற்கு முன்பு பாகுபலி-2 படம் 6500 திரையரங்குகளில் வெளியானது. இப்படம் 15 மொழியில் வெளியாகியுள்ளது, உலகம் முழுவதும் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 50 கோடியை தாண்ட உள்ளது.

 தமிழ் ராக்கர்ஸ்: தற்போது தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் 2.O படம் முதல் நாளே வெளியிடப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.







இந்த அறிவிப்பை தொடர்ந்து 2.O படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்-2.O திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது இதனை முறைக்கேடாக 12657 இணையத்தளங்களில் வெளியிட தடை விதிக்கவேண்டும், அதிலும் குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் தான் தன்னுடைய இணையதள பெயர்களை மாற்றி தெடர்ச்சியாக புதிய படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதை விசாரித்த நீதிபதிகள் தமிழ் ராக்கர்ஸ் ற்கு சொந்தமான அனைத்து இணையத்தளங்களிலும் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டனர். 

பேருந்து இடையில் சிக்கி பெண் உயிரிழப்பு












சென்னை: சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இரு பேருந்து இடையே சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டையை வசித்து வருபவர் சகாதேவன் இவருடைய மனைவி வள்ளி, இவர் பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை அலுவலகத்திற்கு செல்வதற்காக தி.நகர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது கண்ணகி நகர் செல்லும் 5ஜி பேருந்து மற்றும் திருப்போருர் செல்லும் 519 பேருந்தும் மிக நெருக்கமாக அருகருகே நின்று கொண்டு இருந்தது. வள்ளி பெருங்குடி செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 5ஜி பேருந்தில் ஏற முற்படும்போது அருகே உள்ள திருப்போருர் பேருந்து ஓட்டுநர் கவனக் குறைவால் பேருந்தை இயக்கி உள்ளார். அப்போது வள்ளி எதிர்பாராத விதமாக தவறி அப்பேருந்தில் சிக்கி கெண்டு கூச்சலிட்டார், இதை பார்த்த பொது மக்களும் கூச்சலிட்டனர். இருந்த போதும் வள்ளி பேருந்து இடித்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அடுத்து பொது மக்கள் உடனடியாக அருகே உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் இரு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

Sunday, November 25, 2018

பெண்ணின் உடலை முழுவதுமாக விழுங்கிய 23 அடி மலைப்பாம்பு


இந்தோனேஷியா: கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி ஒரு 23 அடி மலைப்பாம்பு ஒரு பெண்ணின் உடலை முழுவதுமாக விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவில் அருகிலுள்ள கிராமத்தில் வா டிபா என்ற 54 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இவர்களின் தோட்டம் உள்ளது. இரவு நேரங்களில் கரடிகள் தோட்டத்தை நாசம் செய்துவிடும் என கருதி வா டிபா தோட்டத்தை கண்காணிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். இரவு கழிந்து பொழுது விடிந்த போதிலும் வா டிபா வீடு திரும்பாததால் அவர் உறவினர்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் வா டிபாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள அவர்களின் தோட்டத்தில் தேடும் போது அவர்களின் பார்வையில் வா டிபா எடுத்துச்சென்ற பேட்டரி தென்பட்டது. மேலும் அதன் அருகில் வா டிபாவின் காலனிகள், பை ஆகியவை சிதறி கிடந்தன. அவற்றை கடந்து தேடிச்சென்று போது 100 மீட்டர் இடைவெளியில் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அங்கு 23 அடி மலைப்பாம்பு தனது இயல்பான அளவை காட்டிலும் பெரியதாக காணப்பட்டது. அது எதையோ விழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்தது. மலைப்பாம்பு வா டிபாவை விழுங்கி இருக்ககூடும் என சந்தேகித்தனர் ஊர் மக்கள், பின்னர் அந்த மலைப்பாம்பை தோட்டத்தலிருந்து கொண்டு சென்று அதை அறுத்து எடுக்க முற்ப்பட்டனர். மேலும் அதனை பெரிய கத்தியை கொண்டு அறுத்தனர் அப்போது வா டிபாவின் உடல் இறந்த நிலையில் பாம்பின் வயிற்று பகுதியில் காணப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியதாவது-பொதுவாக மலைப்பாம்பு ஒரு இறையை விழுங்கும் முன்பு அந்த இறையை தனது விஷ பல்லினால் கடித்து இறுக்கி உயிரிழக்க செய்த பின்னரே அவற்றை விழுங்குமாம், அதே போல வா டிபாவை முதலில் கொன்று பின்னரே விழுங்கி இருக்கக்கூடும் என தெரிவித்தனர். மலைப்பாம்பு இயல்பாகவே நரி, பன்றிகள், குரங்குகள் போன்ற உயிரினங்களையே தனது உணவாக உட்கெள்ளும். இவை மனித உயிரினத்தை உட்கொல்வது அரிது. ஆனாலும் வா டிபாவை பாம்பு விழுங்கிய இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.
https://youtu.be/tr7dRjVDX_Q

Friday, November 23, 2018

நாய் கறி இல்லை ஆட்டு இறைச்சி தான்


நாய் கறி இல்லை ஆட்டு இறைச்சி தான்

சென்னை: கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஜொத்பூரிலிருந்து மண்ணார்குடி செல்லும் இரயிலில் 2000 கிலோ இறைச்சி சென்னை வந்துள்ளது. இரயிலில் வந்த இறைச்சி பார்பதற்கு நாயை போல வால் நீளமாக இருப்பதை கண்டு உள்ளனர். அதை அதிகாரிகள் சோதனை செய்வதற்கு முன்னதாகவே மீடியாவில் அதை நாய் கறி தான் என சித்தரித்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி விட்டனர். முதற்கட்டமாக 1000 கிலோ இறைச்சியை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். பின் வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்த அதிகாரிகள் அது ஆட்டு இறைச்சி தான் நாய் இறைச்சி அல்ல என உறுதி செய்துள்ளனர்.இதை அடுத்து ஆட்டு இறைச்சி தான் என நிருபித்து காட்டியிருக்கிறார் சேலம் RR பிரியாணியின் உறிமையாளர் திரு. தமிழ்ச்செல்வன். அவர் கூறுகையில்-நாய் இறைச்சி என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது அதனால் நாங்களே ஜொத்பூர் சென்று இவ்வகையான ஆடுகளை வாங்கி வந்துள்ளோம். இவ்வகையான ஆட்டிற்கு வால் நீளமாக இருப்பதை கண்டு யாரும் அச்ச பட தேவையில்லை என கூறியுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.
https://youtu.be/Ec8xwPqW1oo

Wednesday, November 21, 2018

கஜா புயல் நிவாரண உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட எண்ணை அனுகவும்

*புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும். 9790380040*

*மின்சாரம் இல்லாத ஊருக்கு 2000 வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.*
*9500764610 7305103190  வாடகை வேண்டாம்.*

*மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும்.*
*ராம் 7871892877 பாலாஜி 9944332270 ராசா 88838 88147 ரஞ்சித் 90471 83130*


*முத்துப்பேட்டையில் 700 பேருக்கான உணவு தயாராக உள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படுபர்கள் பெற்றுக்கொள்ளவும். Sabarinivas: 9025005329*

*பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும்.*
*தொடர்பு:- Jayaprakash 91711 21711*

*ஜெனரேட்டர் மூலம் குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவை இருந்தால் அணுகவும்.*
*இடம் - கரிக்காடு, பட்டுக்கோட்டை 9894503455 9042324217 Sathish Kumar*

*பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும்* *7010207765*

Thursday, November 15, 2018

GAJA Cyclone Passes by 11'o clock


Cyclone warning signal 10, which signifies that very severe cyclone is expected to cross was hoisted at the Nagapattinam port. Photo: AP


 As cyclone Gaja is expected to make landfall in Tamil Nadu and Puducherry on Thursday night, extremely heavy rainfall of more than 20 centimetres is likely to occur over the districts of Cuddalore, Nagapattinam, Karaikal, Thiruvarur, Thanjavur, Pudukottai, Ramanathapuram and Thoothukudi, forecasted the Indian Meteorological Department (IMD).
Cyclone Gaja, which has been changing its pattern and direction over the last few days, intensified into a severe storm. While it was initially expected to hit the coast of Chennai, it has moved south west wards and will cross Tamil Nadu between Pamban and Cuddalore around Nagapattinam with a wind speed of 80-90 kilometre per hour (kmph) gusting to 100 kmph. Gaja is likely to cross Tamil Nadu between 8 pm and 11 pm.
It was earlier forecasted that the cyclone would cross the coast on Thursday afternoon.
Cyclone warning signal 10, which signifies that very severe cyclone is expected to cross was hoisted at the Nagapattinam port.
“Heavy to very heavy rain is also likely to occur over remaining districts of Tamil Nadu and Puducherry,” said the IMD bulletin.
The cyclone will also bring isolated rains to Andhra Pradesh and Kerala.
People residing in low lying areas have been moved to shelters arranged by the government. Over 5,000 relief centres have been kept ready in all the 13 coastal districts of Tamil Nadu
. As per the advisory of the meteorological department fishing operations have remained suspended.