Sunday, November 25, 2018

பெண்ணின் உடலை முழுவதுமாக விழுங்கிய 23 அடி மலைப்பாம்பு


இந்தோனேஷியா: கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி ஒரு 23 அடி மலைப்பாம்பு ஒரு பெண்ணின் உடலை முழுவதுமாக விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவில் அருகிலுள்ள கிராமத்தில் வா டிபா என்ற 54 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இவர்களின் தோட்டம் உள்ளது. இரவு நேரங்களில் கரடிகள் தோட்டத்தை நாசம் செய்துவிடும் என கருதி வா டிபா தோட்டத்தை கண்காணிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். இரவு கழிந்து பொழுது விடிந்த போதிலும் வா டிபா வீடு திரும்பாததால் அவர் உறவினர்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் வா டிபாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள அவர்களின் தோட்டத்தில் தேடும் போது அவர்களின் பார்வையில் வா டிபா எடுத்துச்சென்ற பேட்டரி தென்பட்டது. மேலும் அதன் அருகில் வா டிபாவின் காலனிகள், பை ஆகியவை சிதறி கிடந்தன. அவற்றை கடந்து தேடிச்சென்று போது 100 மீட்டர் இடைவெளியில் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அங்கு 23 அடி மலைப்பாம்பு தனது இயல்பான அளவை காட்டிலும் பெரியதாக காணப்பட்டது. அது எதையோ விழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்தது. மலைப்பாம்பு வா டிபாவை விழுங்கி இருக்ககூடும் என சந்தேகித்தனர் ஊர் மக்கள், பின்னர் அந்த மலைப்பாம்பை தோட்டத்தலிருந்து கொண்டு சென்று அதை அறுத்து எடுக்க முற்ப்பட்டனர். மேலும் அதனை பெரிய கத்தியை கொண்டு அறுத்தனர் அப்போது வா டிபாவின் உடல் இறந்த நிலையில் பாம்பின் வயிற்று பகுதியில் காணப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியதாவது-பொதுவாக மலைப்பாம்பு ஒரு இறையை விழுங்கும் முன்பு அந்த இறையை தனது விஷ பல்லினால் கடித்து இறுக்கி உயிரிழக்க செய்த பின்னரே அவற்றை விழுங்குமாம், அதே போல வா டிபாவை முதலில் கொன்று பின்னரே விழுங்கி இருக்கக்கூடும் என தெரிவித்தனர். மலைப்பாம்பு இயல்பாகவே நரி, பன்றிகள், குரங்குகள் போன்ற உயிரினங்களையே தனது உணவாக உட்கெள்ளும். இவை மனித உயிரினத்தை உட்கொல்வது அரிது. ஆனாலும் வா டிபாவை பாம்பு விழுங்கிய இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.
https://youtu.be/tr7dRjVDX_Q

No comments:

Post a Comment