Friday, November 23, 2018

நாய் கறி இல்லை ஆட்டு இறைச்சி தான்


நாய் கறி இல்லை ஆட்டு இறைச்சி தான்

சென்னை: கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஜொத்பூரிலிருந்து மண்ணார்குடி செல்லும் இரயிலில் 2000 கிலோ இறைச்சி சென்னை வந்துள்ளது. இரயிலில் வந்த இறைச்சி பார்பதற்கு நாயை போல வால் நீளமாக இருப்பதை கண்டு உள்ளனர். அதை அதிகாரிகள் சோதனை செய்வதற்கு முன்னதாகவே மீடியாவில் அதை நாய் கறி தான் என சித்தரித்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி விட்டனர். முதற்கட்டமாக 1000 கிலோ இறைச்சியை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். பின் வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்த அதிகாரிகள் அது ஆட்டு இறைச்சி தான் நாய் இறைச்சி அல்ல என உறுதி செய்துள்ளனர்.இதை அடுத்து ஆட்டு இறைச்சி தான் என நிருபித்து காட்டியிருக்கிறார் சேலம் RR பிரியாணியின் உறிமையாளர் திரு. தமிழ்ச்செல்வன். அவர் கூறுகையில்-நாய் இறைச்சி என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது அதனால் நாங்களே ஜொத்பூர் சென்று இவ்வகையான ஆடுகளை வாங்கி வந்துள்ளோம். இவ்வகையான ஆட்டிற்கு வால் நீளமாக இருப்பதை கண்டு யாரும் அச்ச பட தேவையில்லை என கூறியுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.
https://youtu.be/Ec8xwPqW1oo

No comments:

Post a Comment