Thursday, November 29, 2018

பேருந்து இடையில் சிக்கி பெண் உயிரிழப்பு












சென்னை: சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இரு பேருந்து இடையே சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டையை வசித்து வருபவர் சகாதேவன் இவருடைய மனைவி வள்ளி, இவர் பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை அலுவலகத்திற்கு செல்வதற்காக தி.நகர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது கண்ணகி நகர் செல்லும் 5ஜி பேருந்து மற்றும் திருப்போருர் செல்லும் 519 பேருந்தும் மிக நெருக்கமாக அருகருகே நின்று கொண்டு இருந்தது. வள்ளி பெருங்குடி செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 5ஜி பேருந்தில் ஏற முற்படும்போது அருகே உள்ள திருப்போருர் பேருந்து ஓட்டுநர் கவனக் குறைவால் பேருந்தை இயக்கி உள்ளார். அப்போது வள்ளி எதிர்பாராத விதமாக தவறி அப்பேருந்தில் சிக்கி கெண்டு கூச்சலிட்டார், இதை பார்த்த பொது மக்களும் கூச்சலிட்டனர். இருந்த போதும் வள்ளி பேருந்து இடித்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அடுத்து பொது மக்கள் உடனடியாக அருகே உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் இரு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment