Thursday, November 29, 2018

2.O படம் புதிய சாதனை படைத்துள்ளது


















 சென்னை: டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்க்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.O, இந்தியாவின் மிக பிரமாண்ட படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இதன் சாட்டிலைட் உரிமம் மட்டும் 350 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நம் தமிழ் படம் அமைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகிறது, இதற்கு முன்பு பாகுபலி-2 படம் 6500 திரையரங்குகளில் வெளியானது. இப்படம் 15 மொழியில் வெளியாகியுள்ளது, உலகம் முழுவதும் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 50 கோடியை தாண்ட உள்ளது.

 தமிழ் ராக்கர்ஸ்: தற்போது தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் 2.O படம் முதல் நாளே வெளியிடப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.







இந்த அறிவிப்பை தொடர்ந்து 2.O படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்-2.O திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது இதனை முறைக்கேடாக 12657 இணையத்தளங்களில் வெளியிட தடை விதிக்கவேண்டும், அதிலும் குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் தான் தன்னுடைய இணையதள பெயர்களை மாற்றி தெடர்ச்சியாக புதிய படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதை விசாரித்த நீதிபதிகள் தமிழ் ராக்கர்ஸ் ற்கு சொந்தமான அனைத்து இணையத்தளங்களிலும் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டனர். 

No comments:

Post a Comment