Monday, December 10, 2018

31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!



ஆஸ்திரேலியா: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸ்: முதலில் களம் இறங்கிய இந்திய வீரர்கள் செர்ப ரன்களில் விக்கெட்டை இழந்து தடுமாறினார்கள். இதில் ராகுல்-2 ரன்கள், கோலி-3 ரன்கள், முரளி விஜய்- 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் பின்னர் களம் இறங்கிய புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தால் 123 ரன்கள் குவித்தார். இதையடுத்து மொத்த விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 250 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விக்கெட்களை பறிகொடுத்து 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது, இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் குவித்தார். இதில் அஸ்வின் மற்றும் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸ்: இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தெடக்கத்தில் இருந்தே நன்றாக விளையாடி வந்தனர். முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் புஜாரா அற்புதமாக விளையாடி 71 ரன்களை குவித்தார், இதையடுத்து ரஹானே 70 ரன்களும் ராகுல் 44 ரன்களும் எடுத்தனர், பின்பு இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்களை பறி கொடுத்தாலும் ஷான் மார்ஷ் மற்றும் டிம் பெய்ன் நன்றாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர். பின்னர் இந்திய வீரர்களின் அசாத்தியமான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின், ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை வென்றது. வரும் டிசம்பர் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment