சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் குளியலறை, படுக்கை அறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி படம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் இரண்டு அடுக்கு மாடி வீட்டை வாடகை எடுத்து வசித்து வருபவர் சம்பத்ராஜ், இவர் திருச்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை வாடகை எடுத்து அதை பெண்கள் விடுதியாக மாற்றி நடத்தி வருகிறார். இங்கு வெளி ஊரிலிருந்து சென்னை வந்து பணிபுரியும் பெண்கள் சிலர் தங்கி இருந்தனர்.
சம்பத்ராஜ் அங்கு விடுதி தொடங்குவதற்கு முன்னரே ஆன்லைனில் ரகசிய கேமராவை வாங்கி வந்து அதை குளியலறை, படுக்கையறை மற்றும் மின் விளக்குகளில் பொருத்தியுள்ளார். பின்னர் பெண்கள் குளிக்கும் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை அவர் கைபேசி மற்றும் லேப்டாபோடு இணைத்து வீடியோக்களை சேகரித்து வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் விடுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் குளிக்கும்போது தற்செயலாக பொருத்தப்பட்டிருக்கும் 3-பின் அடாப்டரை பார்த்த போது அதில் கறுப்பாக ஏதே தெரிந்துள்ளது, பின் பிரித்து பார்த்த அவர் கோமராவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் விடுதியில் உள்ள தோழிகளிடம் கூறி விடுதியை சோதனை செய்தனர். அப்போது 16 கேமராக்களை கண்டு பிடித்தனர். இதனையடுத்து விடுதி பெண்கள் உடனடியாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் சென்று சம்பத்ராஜ் பெயரில் புகார் அளித்தனர். பின்னர் காவலர்கள் விரைந்து வந்து சோதனை செய்ததில் 16 கேமராக்கள், செல்போன் மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டது. கைபேசி மற்றும் லேப்டாப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை கைப்பற்றினர். அதன்பின் அவரை கைது செய்து விசாரித்ததில் சம்பத்ராஜ் இந்த வீடியோக்களை வெளிநாட்டிற்கு அனுப்பி கோடி கோடியாக சம்பாரிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment