சென்னை: தற்போது கஜா புயல் மற்றும் பருவ மழையினால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு தேவைக்கு அதிகமாக மழை பெற்ற போதிலும், சென்னைக்கு குறைவான மழைப்பொழிவு மட்டுமே கிடைத்துள்ளது. மழைப்பொழிவு தேவைக்கேற்றாற்போல் பொழிந்தாலும் அதை தேக்கி வைப்பதற்கான தண்ணீர் மேலாண்மையில் தமிழகத்தின் நிலைப்பாடு வேதனை அளிக்கிறது.
மழைநீர் சேகரிப்பு: நிலத்தடி நீர்மட்டத்த அதிகரிக்கவும் மற்றும் மழைநீர் கடல் நீருடன் கலப்பதை தவிர்பதற்காகவும் 2001ஆம் ஆண்டு அப்போதய முதல்வராக இருந்த செல்வி. ஜெ. ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகபடுத்தினார். மேலும் அதை செயல்படுத்த கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தாத குடும்பங்களின் வீடுகளில் மின்சார துண்டிப்பு போன்ற கெடுபிடிகளை கொண்டு வந்தார். இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 50 விழுக்காடு உயர்ந்தது. ஆனால் தற்போது மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் தெரியாத மக்கள் பலபேர் அதை கைவிட்டுவிட்டனர். இப்போது அதுவே சென்னையை பாதிக்கபோகும் பெரும் பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்கின்றனர். சென்னைக்கு தேவையான தண்ணீர் அதை சுற்றியுள்ள பிரதான ஏரிகளான பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் போன்ற நான்கு ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.
ஏரிகளின் கொள்ளலவு: இந்த ஏரிகளின் கொள்ளலவு சுமார் 11 டிஎம்சி ஆகும். ஆனால் இந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீரின் அளவு 1.75 டிஎம்சி மட்டுமே. சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 880 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்ற பட்சத்தில் தற்போது 675 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே விணியோகிக்கபடுகிறது. இந்த தண்ணீர் வரப்போகும் 2 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே டிசம்பர் மாதம் வரை பெய்யவுள்ள வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட சென்னையை ஏமாற்றிய நிலையில் நிலத்தடி நீர் 48% குறைந்துள்ளது. இதனால் சென்னை பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனவே இனியாவது மக்கள் மற்றும் அரசாங்கம் தண்ணீர் மேலாண்மையில் அக்கறை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment