Monday, December 3, 2018

தமிழகத்தில் மழை பள்ளிகளுக்கு விடுமுறை


தமிழ்நாடு: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து கொண்டு வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இ‌ன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை: தற்போது தென் தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை நீடித்து கொண்டே வருவதால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பெருத்த வரை பள்ளிகளுக்கு எந்த வித அறிவிப்பும் விடவில்லை இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆனால் சென்னையில் பெய்து வரும் மழை தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருக்கிறது. 

No comments:

Post a Comment