டெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. கடந்த மே மாதத்தில் நடந்த ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் 100வது நாள் அன்று பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் தீவிரம் அடையவே மக்கள் கூட்டத்தை களைக்க காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர், இதில் 10 பேர் துப்பாக்கியால் சுட்டு கொள்ள பட்டனர். இதை தொடர்ந்து மே 28ஆம் தேதி தமிழக அரசால் சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் செய்து ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடியது. இதையடுத்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது, இதனை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமை பசுமையத்தை விசாரித்து தீர்ப்பினை வழங்க உத்தரவிட்டனர். அதனை விசாரித்து ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது 3 வாரத்திற்குள் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர், ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்போது புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் மாதம் ஒருமுறை மாசு குறித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் அந்த விவரங்களை மத்திய மற்றும் மாநில மாசு கட்டுபாட்டு வாரியத்துடன் பகிர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி மாதம் ஒரு முறை தரவுகளை தரவில்லை என்றால் பத்து லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த செய்தி தூத்துக்குடி மக்களுக்கு தெரியவந்ததையடுத்து பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது அதனால் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் காவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Saturday, December 15, 2018
மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடியில் பதற்றமான சூழல்
டெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. கடந்த மே மாதத்தில் நடந்த ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் 100வது நாள் அன்று பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் தீவிரம் அடையவே மக்கள் கூட்டத்தை களைக்க காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர், இதில் 10 பேர் துப்பாக்கியால் சுட்டு கொள்ள பட்டனர். இதை தொடர்ந்து மே 28ஆம் தேதி தமிழக அரசால் சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் செய்து ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடியது. இதையடுத்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது, இதனை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமை பசுமையத்தை விசாரித்து தீர்ப்பினை வழங்க உத்தரவிட்டனர். அதனை விசாரித்து ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது 3 வாரத்திற்குள் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர், ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்போது புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் மாதம் ஒருமுறை மாசு குறித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் அந்த விவரங்களை மத்திய மற்றும் மாநில மாசு கட்டுபாட்டு வாரியத்துடன் பகிர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி மாதம் ஒரு முறை தரவுகளை தரவில்லை என்றால் பத்து லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த செய்தி தூத்துக்குடி மக்களுக்கு தெரியவந்ததையடுத்து பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது அதனால் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் காவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment