Sunday, December 2, 2018

டிசம்பர் 4 ஆம் தேதி முதல் சென்னையில் மழை தொடங்கும்


சென்னை: சென்னை மற்றும் வடதமிழகத்தில் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியுள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் வட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாமல் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.இந்த செய்தி வேதனை அளித்தாலும் தற்போது வெளியாகி உள்ள செய்தி சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை அறிவிப்பு: இது குறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது - அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலையானது கிழக்கு திசையை நோக்கி நகர்வதால் வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இதனால் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழை பெய்யும் என அறிவித்துள்ளனர். மேலு‌ம் இ‌ந்த வானிலை மாற்றத்தின் காரணமாக வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழையும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். இந்த மழையானது டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அடுத்த மூன்று நாட்கள் அதாவது டிசம்பர் 6 ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இச்செய்தி வடதமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment