Tuesday, December 4, 2018

4 மாதமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை அதிகாரி கைது


சென்னை: சென்னையில் காவல்துறை அதிகாரி ஒருவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வருபவர் சேகர் இவர் மாதவரம் காவல் நிலையத்தில் ஸ்பேஷல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் வில்லிவாக்கம் பகுதியில் நேற்றிரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று ஆள் இல்லாத ஒரு இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது சிறுமி கத்தி அழுதுள்ளார், சிறுமியின் கதறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர் அதற்கு முன்னதாகவே சேகர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பிறகு சிறுமியிடம் விசாரித்த பெற்றோர் சிறுமி சொன்ன தகவலால் ஆத்திரம் அடைந்து சேகரை விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சென்று புகார் செய்த போதும் காவலர்கள் வழக்கை பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். உடனடியாக தகவலை உயர்அதிகாரியிடம் எடுத்து சென்றுள்ளனர், அவர் இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

காவலர் கைது: மேலும் சிறுமியிடம் விசாரித்த காவல் நிலைய குழந்தை ஆலுவலர், கடந்த 4 மாதங்களாக காவலர் சேகர் அச்சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. பிறகு காவலர் சேகரிடம் விசாரணை நடத்திய வில்லிவாக்கம் போலிஸாரிடம் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போல் பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

No comments:

Post a Comment