Sunday, December 16, 2018

சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி பெய்ட்டி புயல்


சென்னை: சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது பெய்ட்டி புயல். தற்போது பெய்ட்டி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது, மணிக்கு 19 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

கடல் சீற்றம்: இன்று டிசம்பர் 16 காலை முதலே சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது, இதனால் மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பெய்ட்டி புயல் தற்போது ஆந்திராவை நோக்கி நகர்வதால் சென்னையை பொறுத்தவரை மிதமான மழை இருக்கும் என தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment