Tuesday, December 18, 2018

பிரசாதத்தில் விஷம் 14 பேர் பலி


கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள சூலவாடி என்ற ஊரில் மாரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு நாட்கள் முன்பு விசேஷ பூஜை ஒன்று நடந்தது, பூஜை முடிந்து பின் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வாந்தி, மயக்கம்: பிரசாதமாக தக்காளி சாதமும், பஞ்சாமிர்தமும் சாப்பிட்ட மக்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். பின்னர் அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உணவில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரசாதத்தில் பூச்சிகொல்லி மருந்து: தற்போது கர்நாடகாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்நாடகா துணை முதல்வர்  பரமேஸ்வரா இந்த சம்பவம் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டார், அவர் கூறுகையில், '' கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தின் சிறிய பகுதி தடயவியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது, அதில் விளைநிலங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்து கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.'' தற்போது காவலர்கள் அப்பகுதி மக்களிடம் யார் விஷத்தை கலந்து இருப்பார்கள் என விசாரித்து கொண்டு வருகின்றனர். 

Sunday, December 16, 2018

சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி பெய்ட்டி புயல்


சென்னை: சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது பெய்ட்டி புயல். தற்போது பெய்ட்டி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது, மணிக்கு 19 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

கடல் சீற்றம்: இன்று டிசம்பர் 16 காலை முதலே சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது, இதனால் மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பெய்ட்டி புயல் தற்போது ஆந்திராவை நோக்கி நகர்வதால் சென்னையை பொறுத்தவரை மிதமான மழை இருக்கும் என தெரிவித்துள்ளனர். 

Saturday, December 15, 2018

மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடியில் பதற்றமான சூழல்


டெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. கடந்த மே மாதத்தில் நடந்த ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் 100வது நாள் அன்று பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் தீவிரம் அடையவே மக்கள் கூட்டத்தை களைக்க காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர், இதில் 10 பேர் துப்பாக்கியால் சுட்டு கொள்ள பட்டனர். இதை தொடர்ந்து மே 28ஆம் தேதி தமிழக அரசால் சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் செய்து ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடியது. இதையடுத்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது, இதனை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமை பசுமையத்தை விசாரித்து தீர்ப்பினை வழங்க உத்தரவிட்டனர். அதனை விசாரித்து ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது 3 வாரத்திற்குள் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர், ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்போது புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் மாதம் ஒருமுறை மாசு குறித்து  விவரங்களை இணையத்தில் வெளியிட  வேண்டும் என்றும் அந்த விவரங்களை மத்திய மற்றும் மாநில மாசு கட்டுபாட்டு வாரியத்துடன் பகிர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி மாதம் ஒரு முறை  தரவுகளை தரவில்லை என்றால் பத்து லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த செய்தி தூத்துக்குடி மக்களுக்கு தெரியவந்ததையடுத்து பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது அதனால் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் காவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 

Wednesday, December 12, 2018

வெளியானது பேட்ட படம் டீசர்


சென்னை: இன்று டிசம்பர் 12 ரஜினிகாந்தின் 68 வது பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். அவரது ரசிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தனர். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் சார்பாக பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் '' பேட்ட'' திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. 1.33 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில் ரசிகர்கள் ஒவ்வெருக்கொள்ளும் 90 களில் பார்த்த ரஜினியை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. இதில் இரு கெட்டப்பில் ரஜினி வலம் வருகிறார். ஒரு கெட்டப் தாதா போன்றும் இன்னொரு கெட்டப் ஊருக்கு சேவை செய்யும் ஒரு பொதுநலவாதி போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. டீசர் வெளியானது முதல் இதுவரை 45 லட்சம் பேர் இதை யூடியூப் மூலம் பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் இசை டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் தீவிர ரசிகரானதால் படத்தின் காட்சிகள் ரசிகர்களின் மனம் திருப்தி அடையும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினி அரசியல் பிரவேசம் எடுக்க போகும் நிலையில், இப்படம் அதற்கான அச்சாணியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

'' என்னுடைய சாதியை சாக்கடையில் தேடுங்கள்'' நடிகை ரித்விகா காட்டம்



சென்னை: நடிகை ரித்விகாவின் சாதி என்னவென்று தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். முன்பெல்லாம் ஒரு ஆண் ஒரு துறையில் சாதித்தால் தான் அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என கூகுளில் ஆராய்ந்து கண்டு பிடிப்பார்கள். ஆனால் பெண்கள் விவகாரத்தில் சாதியை பற்றி அவ்வளவாக ஆராய்வதில்லை.

இயக்குனர் பாலாவின் பரதேசி படம் மூலம் அறிமுகமாகி பின்னர் இயக்குனர்  பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி படங்களில் ரித்விகா நடித்துள்ளார், அதுமட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ்-2 போட்டியில் பங்கு பெற்று வெற்றியாளர் பட்டம் வென்றார். இவர் பிக் பாஸ்-2 வில் வென்ற பிறகு இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் ஆகியது.இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் இவருடைய சாதி என்னவென்று தெரிந்துகொள்வதில் நெட்டிசன்கள் வெறிகொண்டு தேடி வருகின்றனர். கூகுளில் மட்டும் 3 லட்சம் பேர் ரித்விகா எந்த ஜாதியை சேர்ந்தவர் என்று இதுவரை தேடி இருக்கிறார்கள். இதனை அறிந்த ரித்விகா கொந்தளித்து கூறியதாவது - 'நான் எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள், நான் அந்த சாதியும் இல்லை இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபிடிச்சுக்கோங்கடா' என்று காட்டமாக கூறியுள்ளார்.

Monday, December 10, 2018

31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!



ஆஸ்திரேலியா: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸ்: முதலில் களம் இறங்கிய இந்திய வீரர்கள் செர்ப ரன்களில் விக்கெட்டை இழந்து தடுமாறினார்கள். இதில் ராகுல்-2 ரன்கள், கோலி-3 ரன்கள், முரளி விஜய்- 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் பின்னர் களம் இறங்கிய புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தால் 123 ரன்கள் குவித்தார். இதையடுத்து மொத்த விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 250 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விக்கெட்களை பறிகொடுத்து 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது, இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் குவித்தார். இதில் அஸ்வின் மற்றும் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸ்: இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தெடக்கத்தில் இருந்தே நன்றாக விளையாடி வந்தனர். முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் புஜாரா அற்புதமாக விளையாடி 71 ரன்களை குவித்தார், இதையடுத்து ரஹானே 70 ரன்களும் ராகுல் 44 ரன்களும் எடுத்தனர், பின்பு இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்களை பறி கொடுத்தாலும் ஷான் மார்ஷ் மற்றும் டிம் பெய்ன் நன்றாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர். பின்னர் இந்திய வீரர்களின் அசாத்தியமான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின், ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை வென்றது. வரும் டிசம்பர் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Sunday, December 9, 2018

டெல்லியை சேர்ந்த 14 வயது சிறுவன் 4 மாதங்களில் 100 கிலோ எடை குறைப்பு


டெல்லி: டெல்லியை சேர்ந்த மிகிர் ஜெயின் எனும் 14 வயது சிறுவன் 237 கிலோ எடையை கொண்டு உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக இருந்தான். ஆனால் தற்போது சிறுவனுக்கு அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சையால் 100 கிலோ எடை குறைக்கப்பட்டு இருக்கிறது. மிகிர் ஜெயின் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம், அவன் சிறு வயதில் இருந்து விரும்பி சாப்பிட்ட பீட்சா, பர்கர் மற்றும் நொறுக்கு தீனிகள் தான்.

சிறுவன் சிறு வயதில் இருந்து அதிகளவில் சாப்பிட்டு வளர்ந்ததால் தனது 7வது வயதில் உடல் எடை கூடி பள்ளிக்கு செல்வதை கைவிட நேர்ந்தது. பின் வளர வளர எடை அதிகமாகி மூச்சு திணறல் மற்றும் சர்க்கரை நோய் சிறுவன் உடலை தாக்கியது. பின் சிறுவன் தனது 14வது வயதில் 237 கிலோ எடையால் எழுந்திருக்ககூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தான். கடந்த ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வந்த தொடர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையினால் தற்போது 100 கிலோ எடையை குறைத்து இருக்கிறார். மேற்கொண்டு 50 கிலொ எடையை குறைக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Friday, December 7, 2018

தல அஜித் மற்றும் நயன்தாராவின் லீக்கான பதிய லுக்


தற்போது தல அஜித் நடித்து வருகின்ற படம் விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா, தம்பிராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர். விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பட்டயக்கிலப்பி வருகின்றது. இவை ரசிகர்களுக்கு மிகு‌ந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உ‌ரிமை சன் டிவி பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று ரோகினி திரையரங்க உரிமையாளர் டிவிட்டரில் ஒரு டிவீட் செய்துள்ளார் - நாளை தல ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து கொண்டிருக்கிறது என்றார். அதேபோல தற்போது இன்று இணையத்தில் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அதில் தல அஜித் டிராக்டரை இயக்க நயன்தாரா அருகில் அமர்ந்து இருப்பது போல் இருக்கிறது. தற்போது இணையத்தில் டிரன்ட் ஆகி கொண்டு இருக்கிறது இந்த புகைப்படம், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Wednesday, December 5, 2018

பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ - அதிர்ச்சி தகவல்


சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் குளியலறை, படுக்கை அறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி படம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் இரண்டு அடுக்கு மாடி வீட்டை வாடகை எடுத்து வசித்து வருபவர் சம்பத்ராஜ், இவர் திருச்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை வாடகை எடுத்து அதை பெண்கள் விடுதியாக மாற்றி நடத்தி வருகிறார். இங்கு வெளி ஊரிலிருந்து சென்னை வந்து பணிபுரியும் பெண்கள் சிலர் தங்கி இருந்தனர்.

சம்பத்ராஜ் அங்கு விடுதி தொடங்குவதற்கு முன்னரே ஆன்லைனில் ரகசிய கேமராவை வாங்கி வந்து அதை குளியலறை, படுக்கையறை மற்றும் மின் விளக்குகளில் பொருத்தியுள்ளார். பின்னர் பெண்கள் குளிக்கும் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை அவர் கைபேசி மற்றும் லேப்டாபோடு இணைத்து வீடியோக்களை சேகரித்து வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் விடுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் குளிக்கும்போது தற்செயலாக பொருத்தப்பட்டிருக்கும் 3-பின் அடாப்டரை பார்த்த போது அதில் கறுப்பாக ஏதே தெரிந்துள்ளது, பின் பிரித்து பார்த்த அவர் கோமராவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் விடுதியில் உள்ள தோழிகளிடம் கூறி விடுதியை சோதனை செய்தனர். அப்போது 16 கேமராக்களை கண்டு பிடித்தனர். இதனையடுத்து விடுதி பெண்கள் உடனடியாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் சென்று சம்பத்ராஜ் பெயரில் புகார் அளித்தனர். பின்னர் காவலர்கள் விரைந்து வந்து சோதனை செய்ததில் 16 கேமராக்கள், செல்போன் மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டது. கைபேசி மற்றும் லேப்டாப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை கைப்பற்றினர். அதன்பின் அவரை கைது செய்து விசாரித்ததில் சம்பத்ராஜ் இந்த வீடியோக்களை வெளிநாட்டிற்கு அனுப்பி கோடி கோடியாக சம்பாரிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

Tuesday, December 4, 2018

4 மாதமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை அதிகாரி கைது


சென்னை: சென்னையில் காவல்துறை அதிகாரி ஒருவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வருபவர் சேகர் இவர் மாதவரம் காவல் நிலையத்தில் ஸ்பேஷல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் வில்லிவாக்கம் பகுதியில் நேற்றிரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று ஆள் இல்லாத ஒரு இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது சிறுமி கத்தி அழுதுள்ளார், சிறுமியின் கதறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர் அதற்கு முன்னதாகவே சேகர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பிறகு சிறுமியிடம் விசாரித்த பெற்றோர் சிறுமி சொன்ன தகவலால் ஆத்திரம் அடைந்து சேகரை விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சென்று புகார் செய்த போதும் காவலர்கள் வழக்கை பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். உடனடியாக தகவலை உயர்அதிகாரியிடம் எடுத்து சென்றுள்ளனர், அவர் இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

காவலர் கைது: மேலும் சிறுமியிடம் விசாரித்த காவல் நிலைய குழந்தை ஆலுவலர், கடந்த 4 மாதங்களாக காவலர் சேகர் அச்சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. பிறகு காவலர் சேகரிடம் விசாரணை நடத்திய வில்லிவாக்கம் போலிஸாரிடம் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போல் பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

Monday, December 3, 2018

தமிழகத்தில் மழை பள்ளிகளுக்கு விடுமுறை


தமிழ்நாடு: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து கொண்டு வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இ‌ன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை: தற்போது தென் தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை நீடித்து கொண்டே வருவதால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பெருத்த வரை பள்ளிகளுக்கு எந்த வித அறிவிப்பும் விடவில்லை இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆனால் சென்னையில் பெய்து வரும் மழை தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருக்கிறது. 

நெதர்லாந்தில் 5ஜி சோதனையின் போது இறந்த பறவைகள்


தி ஹேக்: நெதர்லாந்து நாட்டின் மேற்கே உள்ள தி ஹேக் நகரில் உள்ள ஒரு பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து மடிந்துள்ளன. இவை அனைத்தும் 5ஜி சோதனையின் போது இறந்துள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 4ஜி செயல்பாட்டில் உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இதையடுத்து 5ஜி செல்போன் சேவைக்கு மேலை நாடுகள் மாறி கொண்டு வரும் வேலையில் சில நாடுகளில் தற்போது 5ஜி சேவையை சோதனை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நெதர்லாந்தில் 5ஜி சேவையை சோதனை செய்யும்போது நூற்றுக்கணக்கான பறவைகள் மரத்திலிருந்து இறந்து கீழே விழுந்தன. இதில் 150 பறவைகள் இறந்தது பிறகு தற்போது 297 ஆக உயர்ந்துள்ளது. 5ஜி சேவைகளால் வேகம்,துல்லியம் ஆகிய வசதிகள் கிடைக்கிறது இருந்தபோதும் சோதனை நடத்தப்பட்டதால் அதன் கதிர்வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் இறந்து மடிகின்றன.

இச்சம்பவத்தை பார்க்கும்போது ஷங்கர் இயக்கிய 2.O படத்தில் வருவது போல் இருக்கிறது. செல்போன் நிறுவனங்கள் வேகமாக, துல்லியமாக நெட்வொர்க் கிடைக்க வேண்டும் என்பதற்காக அலைவரிசையை அதிகம் வைத்து நம் பறவை இணத்தை அழித்து கொண்டே வருகின்றனர். 

Sunday, December 2, 2018

டிசம்பர் 4 ஆம் தேதி முதல் சென்னையில் மழை தொடங்கும்


சென்னை: சென்னை மற்றும் வடதமிழகத்தில் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியுள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் வட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாமல் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.இந்த செய்தி வேதனை அளித்தாலும் தற்போது வெளியாகி உள்ள செய்தி சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை அறிவிப்பு: இது குறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது - அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலையானது கிழக்கு திசையை நோக்கி நகர்வதால் வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இதனால் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழை பெய்யும் என அறிவித்துள்ளனர். மேலு‌ம் இ‌ந்த வானிலை மாற்றத்தின் காரணமாக வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழையும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். இந்த மழையானது டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அடுத்த மூன்று நாட்கள் அதாவது டிசம்பர் 6 ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இச்செய்தி வடதமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Saturday, December 1, 2018

சென்னையை மிரட்ட வரும் குடிநீர் தட்டுபாடு


சென்னை: தற்போது கஜா புயல் மற்றும் பருவ மழையினால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு தேவைக்கு அதிகமாக மழை பெற்ற போதிலும், சென்னைக்கு குறைவான மழைப்பொழிவு மட்டுமே கிடைத்துள்ளது. மழைப்பொழிவு தேவைக்கேற்றாற்போல் பொழிந்தாலும் அதை தேக்கி வைப்பதற்கான தண்ணீர் மேலாண்மையில் தமிழகத்தின் நிலைப்பாடு வேதனை அளிக்கிறது.

   
மழைநீர் சேகரிப்பு: நிலத்தடி நீர்மட்டத்த அதிகரிக்கவும் மற்றும் மழைநீர் கடல் நீருடன் கலப்பதை தவிர்பதற்காகவும் 2001ஆம் ஆண்டு அப்போதய முதல்வராக இருந்த செல்வி. ஜெ. ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகபடுத்தினார். மேலும் அதை செயல்படுத்த கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தாத குடும்பங்களின் வீடுகளில் மின்சார துண்டிப்பு போன்ற கெடுபிடிகளை கொண்டு வந்தார். இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 50 விழுக்காடு உயர்ந்தது. ஆனால் தற்போது மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் தெரியாத மக்கள் பலபேர் அதை கைவிட்டுவிட்டனர். இப்போது அதுவே சென்னையை பாதிக்கபோகும் பெரும் பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்கின்றனர். சென்னைக்கு தேவையான தண்ணீர் அதை சுற்றியுள்ள பிரதான ஏரிகளான பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் போன்ற நான்கு ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.



ஏரிகளின் கொள்ளலவு: இந்த ஏரிகளின் கொள்ளலவு சுமார் 11 டிஎம்சி ஆகும். ஆனால் இந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீரின் அளவு 1.75 டிஎம்சி மட்டுமே. சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 880 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்ற பட்சத்தில் தற்போது 675 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே விணியோகிக்கபடுகிறது. இந்த தண்ணீர் வரப்போகும் 2 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே டிசம்பர் மாதம் வரை பெய்யவுள்ள வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட சென்னையை ஏமாற்றிய நிலையில் நிலத்தடி நீர் 48% குறைந்துள்ளது. இதனால் சென்னை பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனவே இனியாவது மக்கள் மற்றும் அரசாங்கம் தண்ணீர் மேலாண்மையில் அக்கறை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, November 30, 2018

மாற்றான் படம் போல சீனாவில் நடந்த அதிசயம்




பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உலகின் முதல் ஜீன் மாற்றப்பட்ட குழந்தையை உருவாக்கி உள்ளார். நம் மாற்றான் படம் மார்வல் படமான எக்ஸ்மேன், ஐயன்மேன் படத்தில் வருவது போல மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்க படுவார்கள், இந்த மரபணு மாற்றத்தின் மூலம் ஒரு தனி மனிதனின் அறிவு, செயல்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கும்.



இதே போல சீனாவை சேர்ந்த '' ஹீ ஜியாங்கு'' என்ற மருத்துவர் சீனாவில் ஷென்ஸென் பகுதியில் உள்ள தன்னுடைய சோதனை மையத்தில் இந்த குழந்தையை உருவாக்கி உள்ளார். இதுவரை 9 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஜீன் மாற்றத்தை செய்துள்ளார். அவர் கூறியதாவது - ஜீன்களில் மாற்றம் செய்வதன் மூலம் ஒரு குழந்தை இயல்பாக இருக்கும் திறமையை பல மடங்கு அதிகரிக்க முடியும், இதில் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. மேலும் குழந்தைக்கு எய்ட்ஸ் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சியின் முடிவாக நான்கு நாட்கள் முன்பு ஒரு குழந்தை பிறந்ததுள்ளது. ஆனால் இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது இயற்கைக்கு புறம்பான செயல் ஆகையால் இவரை விசாரித்து கைது செய்யும்படி சீன அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Thursday, November 29, 2018

2.O படம் புதிய சாதனை படைத்துள்ளது


















 சென்னை: டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்க்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.O, இந்தியாவின் மிக பிரமாண்ட படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இதன் சாட்டிலைட் உரிமம் மட்டும் 350 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நம் தமிழ் படம் அமைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகிறது, இதற்கு முன்பு பாகுபலி-2 படம் 6500 திரையரங்குகளில் வெளியானது. இப்படம் 15 மொழியில் வெளியாகியுள்ளது, உலகம் முழுவதும் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 50 கோடியை தாண்ட உள்ளது.

 தமிழ் ராக்கர்ஸ்: தற்போது தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் 2.O படம் முதல் நாளே வெளியிடப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.







இந்த அறிவிப்பை தொடர்ந்து 2.O படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்-2.O திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது இதனை முறைக்கேடாக 12657 இணையத்தளங்களில் வெளியிட தடை விதிக்கவேண்டும், அதிலும் குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் தான் தன்னுடைய இணையதள பெயர்களை மாற்றி தெடர்ச்சியாக புதிய படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதை விசாரித்த நீதிபதிகள் தமிழ் ராக்கர்ஸ் ற்கு சொந்தமான அனைத்து இணையத்தளங்களிலும் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டனர். 

பேருந்து இடையில் சிக்கி பெண் உயிரிழப்பு












சென்னை: சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இரு பேருந்து இடையே சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டையை வசித்து வருபவர் சகாதேவன் இவருடைய மனைவி வள்ளி, இவர் பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை அலுவலகத்திற்கு செல்வதற்காக தி.நகர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது கண்ணகி நகர் செல்லும் 5ஜி பேருந்து மற்றும் திருப்போருர் செல்லும் 519 பேருந்தும் மிக நெருக்கமாக அருகருகே நின்று கொண்டு இருந்தது. வள்ளி பெருங்குடி செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 5ஜி பேருந்தில் ஏற முற்படும்போது அருகே உள்ள திருப்போருர் பேருந்து ஓட்டுநர் கவனக் குறைவால் பேருந்தை இயக்கி உள்ளார். அப்போது வள்ளி எதிர்பாராத விதமாக தவறி அப்பேருந்தில் சிக்கி கெண்டு கூச்சலிட்டார், இதை பார்த்த பொது மக்களும் கூச்சலிட்டனர். இருந்த போதும் வள்ளி பேருந்து இடித்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அடுத்து பொது மக்கள் உடனடியாக அருகே உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் இரு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

Sunday, November 25, 2018

பெண்ணின் உடலை முழுவதுமாக விழுங்கிய 23 அடி மலைப்பாம்பு


இந்தோனேஷியா: கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி ஒரு 23 அடி மலைப்பாம்பு ஒரு பெண்ணின் உடலை முழுவதுமாக விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவில் அருகிலுள்ள கிராமத்தில் வா டிபா என்ற 54 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இவர்களின் தோட்டம் உள்ளது. இரவு நேரங்களில் கரடிகள் தோட்டத்தை நாசம் செய்துவிடும் என கருதி வா டிபா தோட்டத்தை கண்காணிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். இரவு கழிந்து பொழுது விடிந்த போதிலும் வா டிபா வீடு திரும்பாததால் அவர் உறவினர்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் வா டிபாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள அவர்களின் தோட்டத்தில் தேடும் போது அவர்களின் பார்வையில் வா டிபா எடுத்துச்சென்ற பேட்டரி தென்பட்டது. மேலும் அதன் அருகில் வா டிபாவின் காலனிகள், பை ஆகியவை சிதறி கிடந்தன. அவற்றை கடந்து தேடிச்சென்று போது 100 மீட்டர் இடைவெளியில் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அங்கு 23 அடி மலைப்பாம்பு தனது இயல்பான அளவை காட்டிலும் பெரியதாக காணப்பட்டது. அது எதையோ விழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்தது. மலைப்பாம்பு வா டிபாவை விழுங்கி இருக்ககூடும் என சந்தேகித்தனர் ஊர் மக்கள், பின்னர் அந்த மலைப்பாம்பை தோட்டத்தலிருந்து கொண்டு சென்று அதை அறுத்து எடுக்க முற்ப்பட்டனர். மேலும் அதனை பெரிய கத்தியை கொண்டு அறுத்தனர் அப்போது வா டிபாவின் உடல் இறந்த நிலையில் பாம்பின் வயிற்று பகுதியில் காணப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியதாவது-பொதுவாக மலைப்பாம்பு ஒரு இறையை விழுங்கும் முன்பு அந்த இறையை தனது விஷ பல்லினால் கடித்து இறுக்கி உயிரிழக்க செய்த பின்னரே அவற்றை விழுங்குமாம், அதே போல வா டிபாவை முதலில் கொன்று பின்னரே விழுங்கி இருக்கக்கூடும் என தெரிவித்தனர். மலைப்பாம்பு இயல்பாகவே நரி, பன்றிகள், குரங்குகள் போன்ற உயிரினங்களையே தனது உணவாக உட்கெள்ளும். இவை மனித உயிரினத்தை உட்கொல்வது அரிது. ஆனாலும் வா டிபாவை பாம்பு விழுங்கிய இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.
https://youtu.be/tr7dRjVDX_Q

Friday, November 23, 2018

நாய் கறி இல்லை ஆட்டு இறைச்சி தான்


நாய் கறி இல்லை ஆட்டு இறைச்சி தான்

சென்னை: கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஜொத்பூரிலிருந்து மண்ணார்குடி செல்லும் இரயிலில் 2000 கிலோ இறைச்சி சென்னை வந்துள்ளது. இரயிலில் வந்த இறைச்சி பார்பதற்கு நாயை போல வால் நீளமாக இருப்பதை கண்டு உள்ளனர். அதை அதிகாரிகள் சோதனை செய்வதற்கு முன்னதாகவே மீடியாவில் அதை நாய் கறி தான் என சித்தரித்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி விட்டனர். முதற்கட்டமாக 1000 கிலோ இறைச்சியை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். பின் வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்த அதிகாரிகள் அது ஆட்டு இறைச்சி தான் நாய் இறைச்சி அல்ல என உறுதி செய்துள்ளனர்.இதை அடுத்து ஆட்டு இறைச்சி தான் என நிருபித்து காட்டியிருக்கிறார் சேலம் RR பிரியாணியின் உறிமையாளர் திரு. தமிழ்ச்செல்வன். அவர் கூறுகையில்-நாய் இறைச்சி என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது அதனால் நாங்களே ஜொத்பூர் சென்று இவ்வகையான ஆடுகளை வாங்கி வந்துள்ளோம். இவ்வகையான ஆட்டிற்கு வால் நீளமாக இருப்பதை கண்டு யாரும் அச்ச பட தேவையில்லை என கூறியுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.
https://youtu.be/Ec8xwPqW1oo

Wednesday, November 21, 2018

கஜா புயல் நிவாரண உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட எண்ணை அனுகவும்

*புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும். 9790380040*

*மின்சாரம் இல்லாத ஊருக்கு 2000 வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.*
*9500764610 7305103190  வாடகை வேண்டாம்.*

*மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும்.*
*ராம் 7871892877 பாலாஜி 9944332270 ராசா 88838 88147 ரஞ்சித் 90471 83130*


*முத்துப்பேட்டையில் 700 பேருக்கான உணவு தயாராக உள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படுபர்கள் பெற்றுக்கொள்ளவும். Sabarinivas: 9025005329*

*பட்டுக்கோட்டை லட்சுமிப்ரியா மண்டபத்தில் உணவு , குடிநீர் தயாராக உள்ளது. வாகன வசதி உள்ள அருகாமை கிராம இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். உணவு தேவைப்படுவோர் பாத்திரங்கள் எடுத்து வந்தால் உதவியாக இருக்கும்.*
*தொடர்பு:- Jayaprakash 91711 21711*

*ஜெனரேட்டர் மூலம் குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவை இருந்தால் அணுகவும்.*
*இடம் - கரிக்காடு, பட்டுக்கோட்டை 9894503455 9042324217 Sathish Kumar*

*பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும்* *7010207765*

Thursday, November 15, 2018

GAJA Cyclone Passes by 11'o clock


Cyclone warning signal 10, which signifies that very severe cyclone is expected to cross was hoisted at the Nagapattinam port. Photo: AP


 As cyclone Gaja is expected to make landfall in Tamil Nadu and Puducherry on Thursday night, extremely heavy rainfall of more than 20 centimetres is likely to occur over the districts of Cuddalore, Nagapattinam, Karaikal, Thiruvarur, Thanjavur, Pudukottai, Ramanathapuram and Thoothukudi, forecasted the Indian Meteorological Department (IMD).
Cyclone Gaja, which has been changing its pattern and direction over the last few days, intensified into a severe storm. While it was initially expected to hit the coast of Chennai, it has moved south west wards and will cross Tamil Nadu between Pamban and Cuddalore around Nagapattinam with a wind speed of 80-90 kilometre per hour (kmph) gusting to 100 kmph. Gaja is likely to cross Tamil Nadu between 8 pm and 11 pm.
It was earlier forecasted that the cyclone would cross the coast on Thursday afternoon.
Cyclone warning signal 10, which signifies that very severe cyclone is expected to cross was hoisted at the Nagapattinam port.
“Heavy to very heavy rain is also likely to occur over remaining districts of Tamil Nadu and Puducherry,” said the IMD bulletin.
The cyclone will also bring isolated rains to Andhra Pradesh and Kerala.
People residing in low lying areas have been moved to shelters arranged by the government. Over 5,000 relief centres have been kept ready in all the 13 coastal districts of Tamil Nadu
. As per the advisory of the meteorological department fishing operations have remained suspended.