கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள சூலவாடி என்ற ஊரில் மாரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு நாட்கள் முன்பு விசேஷ பூஜை ஒன்று நடந்தது, பூஜை முடிந்து பின் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாந்தி, மயக்கம்: பிரசாதமாக தக்காளி சாதமும், பஞ்சாமிர்தமும் சாப்பிட்ட மக்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். பின்னர் அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உணவில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரசாதத்தில் பூச்சிகொல்லி மருந்து: தற்போது கர்நாடகாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்நாடகா துணை முதல்வர் பரமேஸ்வரா இந்த சம்பவம் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டார், அவர் கூறுகையில், '' கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தின் சிறிய பகுதி தடயவியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது, அதில் விளைநிலங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்து கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.'' தற்போது காவலர்கள் அப்பகுதி மக்களிடம் யார் விஷத்தை கலந்து இருப்பார்கள் என விசாரித்து கொண்டு வருகின்றனர்.